பிரதமர் நரேந்திர மோடியிடம் ஈழத் தமிழர்களுக்காக தமிழீழம் கேட்பேன் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றதன் பிரகாரம் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானமைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மதுரை ஆதீனம் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தவர்களும் வெற்றிபெற்று விட்டார்களே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. அதன் காரணமாகத்தான் அவர்களால் மத்தியில் ஆட்சி செய்ய முடியவில்லை.
அதேநேரம், மோடி இலங்கைத்தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார். மோடிக்கு முக்கியமான கோரிக்கையை முன்வைக்கிறேன்.
ஈழத்தில் இருக்கும் மக்களைப் பாதுகாக்க தமிழீழம் உருவாகவேண்டும். மோடி பிரதமரானதில் எனக்கு மிக மகிழ்ச்சி. சீமானின் வெற்றியால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சீமான் என்னிடம் தனி நாடு வேண்டும் எனக் கோரிக்கை வைக்க வேண்டும் எனக் கூறினார். அதனைத்தான் நானும் கூறுகிறேன் என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
