மறைந்த இந்தியத் திரைப்பட நடிகர் கப்டன் விஜயகாந்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு யாழ் நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள்
6 months ago

மறைந்த இந்தியத் திரைப்பட நடிகர் கப்டன் விஜயகாந்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நடிகர், அரசியல்வாதியாகச் செயற்பட்ட காலத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், அவர்களின் போராட்டம் மீதும் அதிக பற்றுடனும் உணர்வுடனும் செயற்பட்ட ஒருவர் என்ற வகையில் ஈழத் தமிழர்களின் மனங்களில் கப்டன் விஜயகாந்த் இடம்பிடித்திருந்தார்.
ஈழத் தமிழர்களின் போராட்ட ஆர்வம் காரணமாகத் தனது மகனுக்குப் பிரபாகரன் என்ற பெயரையும் விஜயகாந்த் சூட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது,
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
