தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியதால் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் திறக்க முடியாமல் போனது.-- உபாலி சமரசிங்க தெரிவிப்பு

தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியமையால் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தைத் திறக்க முடியாமல் உள்ளது என்று வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
"295 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது, சில அரசியல் தலையீடுகள், இனம் சார்ந்த பிரச்சினைகள், வியாபாரிகள் அல்லது தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியமை போன்றவற்றால் அதனை ஆரம்பிப்பதற்கு தற்போது வரை ஒரு இழுபறி நிலை காணப்படுகின்றது.
மேலும் இது தொடர்பாக பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் அரச அதிபரால் முன்னெடுக்கப்பட்ட போதும் அதனைத் திறக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.
எனவே, அடுத்த மாத நடுப் பகுதியிலே இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிபரும் இணைந்து இது தொடர்பாகக் கலந்துரையாடுவதுடன், இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தைத் திறப்பதற்கான நடவடிக்கையை அடுத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும்."- என்று தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பொருளாதார மத்திய நிலையத்தைத் திறப்பதற்கான நடவடிக்கைக்குச் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து கலந்துரையாடுவதன் மூலமாக இதற்கான தீர்வை இலகுவாக எடுக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் விரைவில் பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
