கஜேந்திரகுமார் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்








தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு இன்றையதினம் (19) சென்றிருந்த போதே அவர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் தாெகுதியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி (AITC) சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்.
அத்தோடு, இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு சென்று சுடர் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தினார்.
மேலும், உரிமைப் பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இனவழிப்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து அரசியல் உறுப்பினர்கள் அனைவருமாக சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டனர்.
குறித்த அஞ்சலியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
