ஈரான் தாக்குதல் எச்சரிக்கை விடுத்த நிலையில் இஸ்ரேலுக்கு போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

ஈரான் தாக்குதல் எச்சரிக்கை விடுத்த நிலையில் இஸ்ரேலுக்கு போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் செயல்பட்டு வருகின்றனர்.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் ஈரான் ஆதரவு பெற்றதாகும்.
இதனால், ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் ஈரானும் கோபம் அடைந்துள்ளது.
கடந்த மாதம் முதலாம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து ஈரானில் உள்ள 20 இராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.
இதனால் இஸ்ரேல் மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் ஐயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் பி- 52 என்ற குண்டுவீச்சு போர் விமானங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இதன் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
