மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கைக்கோடாரிகளுடன் யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் வைத்து மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்குத் தயாராக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
