அர்பெல் யாஹூட் விடுதலையாகும் வரை பலஸ்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்ப அனுமதியோம்-- இஸ்ரேல் தெரிவிப்பு

அர்பெல் யாஹூட் விடுதலை செய்யப்படும் வரை பலஸ்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசமுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பெண்களை இதுவரை விடுதலை செய்துள்ளது.
இதற்கு ஈடாக 290 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
குறிப்பாக நேற்று முன்தினம் இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள் 4 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
இதற்கு ஈடாக 200 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
பணயக் கைதிகளில் அர்பெல் யாஹூட் என்ற இஸ்ரேலிய பெண்ணையும் ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
ஆனால், அர்பெல் யாஹூட்டை ஹமாஸ் விடுதலை செய்யவில்லை.
இந்த நிலையில், அர்பெல் யாஹூட் விடுதலை செய்யப்படும்வரை பலஸ்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி அர்பெல் யாஹூட் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது.
இதனால், அர்பெல் யாஹூட் விடுதலை செய்யப்படும்வரை வடக்கு காஸாவுக்கு பலஸ்தீனியர்கள் திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பணயக் கைதி அர்பெல் யாஹூட் உயிருடன் இருப்பதாகவும், பெப்ரவரி முதலாம் திகதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
