

இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை, குருணாகல், கேகாலை, கண்டி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
அதேநேரம், அதிகரித்திருந்த அனைத்து ஆறுகளின் நீர் மட்டமும் தற்சமயம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்டோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
