பொதுத் தேர்தலுக்காக மட்டக்களப்பில் 17 சுயேச்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியது.

1 year ago


பொதுத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சுயேச்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இரண்டு சுயேச்சைக் குழுக்கள் மற்றும் ஓர் அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 69,686 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க உள்ளதாகவும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்று தங்களது தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் - என்றார். 

அண்மைய பதிவுகள்