இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக வலைத்தளத்தில் பதிவிட்ட ஈரான் ஐயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம்.

இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் ஐயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஈரான் உயர் தலைவரும் இஸ்லாமிய மதகுருவுமான ஐய துல்லா அலி கமேனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இஸ்லாமிய சமுதாயத்தின் தனித்துவ அடையாளத்தை அலட்சியப்படுத்த எதிரிகள் முயற்சித்து வருகின்றனர்.
மியன்மார், காஸா, இந்தியா உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்களை மறந்துவிட்டால் நாம் நம்மை முஸ்லிம்களாகவே கருதமுடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐயதுல்லா அலி கமேனியின் இந்த கருத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் சிறுபான்மையினர் குறித்து ஈரானின் உயர்தலைவர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவை தவறான தகவல்கள் மட் டுமின்றி ஏற்றுக்கொள்ள முடியா தவையும் ஆகும்.
சிறுபான்மையினர் பற்றி கருத்து தெரிவிக்கும் நாடுகள் மற்றவர்களைப் பற்றி எந்த அவதானிப்பும் செய்வதற்கு முன் தங்கள் சொந்த வரலாற்றை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
