வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்.-- இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கு ஏற்புடையதாக வெளிநாடுகளில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நவம்பர் மாதம் ஆரம்பித்துள்ளதுடன் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பில் பாடசாலை மட்டத்தில் புலம்பெயர் இலங்கையர்களின் பிள்ளைகளை அறிவுறுத்த பாடசாலை அதிபர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
குறித்த புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்படுவது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து விட்டு தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை பெற்றோர்களின் பிள்ளைகளுக்காகும்.
குறித்த புலமைப்பரிசில் மூன்று குழுக்களாக வழங்கி வைக்கப்படுகிறது.
அதன் பிரகாரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு 25ஆயிரம் ரூபாவும் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு 30ஆயிரம் ரூபாவும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தகுதிபெற்றுள்ள அல்லது வேறு பாடநெறிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தகுதி பெற்றுள்ள பிள்ளைகளுக்கு 40ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இணையவழி ஊடாக விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இது தொடர்பான மேலதிக தகவலை 0112365471 என்ற தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
