
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பாராளுமன்றம் 3 மாத விடுமுறை அளித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து, கஜேந்திரகுமாருக்கு ஜூலை 2ஆம் திகதியிலிருந்து 3 மாத விடுமுறை வழங்க எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிந்தார்.
இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் வழி மொழிந்தார்.
இதையடுத்து, கஜேந்திரகுமாருக்கு 3 மாத கால விடுமுறை அளிக்க சபை இணக்கம் அளித்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் வெளி நாடொன்றில் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
