யாழ்.காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை இன்று ஆரம்பம்
4 months ago









யாழ்.காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்று (22) மீண்டும் ஆரம்பமானது.
நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது இன்று மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
83 பயணிகள் குறித்த கப்பலில் அங்கிருந்து வருகை தந்திருந்த நிலையில், பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டனத்திற்கு, பயணத்தை ஆரம்பித்த கப்பலில் 83 பேர் பயணித்திருந்தனர்.
இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
