வெளிநாட்டு இலங்கைத் தூதரகங்களில் பணிபுரிபவர்களை திருப்பி அழைக்க இலங்கை அரசு முடிவு

1 year ago


வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் பணிபுரியும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின்               ஆதரவாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங் கத்துக்கு நெருக்கமான முக்கி யஸ்தர்களின் குடும்ப உறுப்பி னர்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி                            அரசாங்கமானது அரசியல்            செல்வாக்கின் அடிப்படையில்     எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

இதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த              காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின்                 அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜ தந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள்                நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அண்மைய பதிவுகள்