

விபுலானந்த அழகியல் நிறுவகத்தில் புகைப்பட கண்காட்சி ஆரம்பமானது
கிழக்கு பல்கலைக்கழக மட் டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் 16ஆவது புகைப்படக் கண்காட்சி, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக வளாகத்தில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மண்ணின் வாழ்வியல் மற்றும் கலை கலாசாரத்தை மையப்படுத்தி எம். சிவகுமாரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே காட்சிப்படுத்தப்பட்டன.
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் போராசிரியர் பாரதி கெனடி புளோரன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
இந்தப் புகைப்பட கண்காட்சியானது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
