தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.
9 months ago


தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சி தனித்து யாழில் போட்டியிடுகிறது.
இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லூர் ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ்.ஆயர் உள்ளிட்ட மதத் தலைவர்களைச் சந்தித்தனர்.
இதன்போது தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடிதுடன் மதத் தலைவர்களிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தேர்தல் பிரசார பணிகளை முழு வீச்சில் முன்னெடுக்க உள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
