182 இந்திய மீனவர்கள் கடந்த சில மாதங்களில் கைது

2 years ago

கடந்த சில மாதங்களில் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் 182 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் வந்த 24 மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.