தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் விபத்தில் 85 பேர் உயிரிழந்தனர்
6 months ago






தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.
விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, முவான் சர்வதேச விமான நிலையத்தின் சுவரில் மோதியதாகத் தென்கொரியச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் 175 பயணிகளும், 6 பணிக்குழாமினரும் இருந்தனர் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
