முல்லைத்தீவில் ஆசிரியர் தங்கியிருந்த வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
9 months ago



முல்லைத்தீவு, முள்ளியவளையில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் என்பன இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிள் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக எரிந்து நாசமாகியது.
முள்ளியவளையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த ஆசிரியருக்கும், உயர்தர மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்த நிலையில் குறித்த மாணவன் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
பின்னர் மீண்டும் அந்த மாணவனை பாடசாலையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
