மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிப்படைந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிப்படைந்தனர்.
9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந் துள்ளதுடன் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்தொழில் பாதிக்கப்பட்டது.
மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களுக்கு வெளிமாவட்டத்துக்குமான போக்குவரத்து மற்றும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ம் திதி ஆரம்பித்த கன மழையினால் மாவட்டதிலுள்ள பெரிய குளமான உன்னிச்சை குளம் மற்றும் குளங்கள் யாவும் நிரம்பியதையடுத்து தேவைக்கு ஏற்றால் போல வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தினால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து 3737 குடும்பங்களைச் சோர்ந்த 11971 பேர் பாதிக்கப்பட்டனர்.
17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 3037 குடும்பங்கனைச் சேர்ந்த 10031 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
9 முகாம்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 பேர் தஞ்சமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மாவட்டதிலுள்ள பல பிரதேசங்களில் வீதிக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து ஓடுகிறது.
இதனால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்தும், கிரானுக்கும் புலிபாய்ந்த கல் பிரதேசத்துக்குமான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
அதற்கான படகு சேவைககள் இடம்பெற்று வருகின்றது.
இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
பல குடும்பங்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழைபெய்து வருவதால் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
