ஈரானுக்கு கொடுக்கும் பதிலடி மரண அடியாக இருக்கும் என இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தெரிவிப்பு.

ஈரானுக்கு கொடுக்கும் பதிலடி மரண அடியாக இருக்கும் என இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது அண்மையில் ஈரான் நடத்திய சரமாரியான ஏவுகணை தாக்குதலை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் கூறி வருகின்ற நிலையில், பதிலடி கொடுத்தால் இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
இவ்வாறான நிலையில், ஈரானுக்கு கொடுக்கும் பதிலடி மரண அடியாக இருக்கும் என இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவ வீரர்களுடனான சந்திப்புக்கு பிறகு ராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஈரான் மீதான எங்கள் தாக்குதல் மிக மோசமானதாகவும் , துல்லியமாகவும், ஆச்சரியம் அளிக்கும் வகையிலும் இருக்கும்.
இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் அதற்கு உரிய விலை கொடுப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
