யாழ்.நகரில் கடந்த 31ஆம் திகதி இரவு வன்முறை கும்பல் ஒன்று இளைஞர் மீது கொடூரமாக தாக்கும் காணொலி வெளியாகியுள்ளது.


யாழ்.நகரில் நேற்றுமுன்தினம் இரவு வன்முறை கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருட இறுதிநாள் என்பதால் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இவ்வாறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு வந்த கும்பல் ஒன்று அங்கு அட்டகாசம் புரிந்துள்ளது.
அந்த கும்பலானது முச்சக்கர வண்டியின் ஒரு சில்லினை தூக்கி ஆபத்தான முறையில் வீதியின் குறுக்கு மறுக்காக ஓடியது.
அதன் பின்னர் குறித்த கும்பல் இளைஞர் ஒருவர் மீது, தலைக்கவசம், கையில் உள்ள பொருட்கள், கை, கால் என்பவற்றை பயன்படுத்தி கொலை வெறித்தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.
இச்சம்பவம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தனபால ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
