மீன்பிடி படகு ஒன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
10 months ago

மீன்பிடி படகு ஒன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்பரப்பில் சுமார் 270 கிலோமீற்றர் தொலைவில் நேற்று (03) அதிகாலை 7 மீனவர்களுடன் பயணித்த மீன்பிடி படகு ஒன்றே இவ்வாறு கப்பல் ஒன்றுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் 28, 43 மற்றும் 52 வயதுடைய அஹுகல்ல, கொஸ்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மீனவர்களை கரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
