யாழ்.பருத்தித்துறை ஆதார மருத்துவமனை விடுதியிலிருந்து மருத்துவர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே மருத்துவமனையின் பெண் நோயியல் மருத்துவரான திருநெல்வேலியைச் சேர்ந்த பிரேமானந்தராசா கிரிஷாந்(வயது 30) என்பவராவார்.
விடுதியில் தங்கியிருந்தவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக மருத்துவரின் உறவினர் ஒருவர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவித்திருந்தார். இதையடுத்து,
அவரின் விடுதியை திறந்த போது மருத்துவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
அதிகளவான மயக்க மருந்தை உடலில் செலுத்திக் கொண்டமையே மரணத்துக்குக் காரணமென பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபை வாசுதேவா மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
