யாழில் இளைஞர் ஒருவர் குழுவொன்றால் அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்கப்பட்டார்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் குழுவொன்றால் அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 18 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினையே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
இளைஞர் மீது தாக்குதல் நடத்தும் போதும் சித்திரவதை செய்யும் போதும் தாக்குதல்தாரிகள் அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் சந்தேகநபர்களாக இருவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
