யாழ்.சாவகச்சேரி மருத்துவமனை சிற்றுண்டிச்சாலை உடைத்து 20 இலட்சம் ரூபா திருட்டு

1 year ago


யாழ்.சாவகச்சேரி மருத்துவமனை சிற்றுண்டி நிலையம் உடைக் கப்பட்டு அங்கிருந்த 20 இலட்சம் ரூபா பணமும் பால்மா உள்ளிட்ட பெறுமதியான பொருள்களும் களவாடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

அதிகாலையில் நிலையத்தைத் திறக்க வந்த சிற்றுண்டி நிலையம் நடத்துபவர் உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு மருத்துவமனை நிர்வாகத்துக்கும் பொலிஸாருக்கும் அறி வித்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


அண்மைய பதிவுகள்