சீன கடற்படை கப்பல் இந்த மாத இறுதியில் இலங்கை வருகின்றது! இந்தியா, அமெரிக்கா அவதானம் செலுத்துகிறது.

சீனாவின் கடற்படை கப்பல் ஒன்று இந்த மாத இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளது என்று தெரிவிக் கப்பட்டது. இலங்கைக்கு வரும் இந்தக் கப்பல் 85 மீற்றர் நீளமும், 11 மீற்றர் அகலமும் கொண்டது. 18 தொட்ஸ் வேகத்தில் பயணிக்கவல்லது.
கடற்படை அதிகாரிகளிடையே தொழில்முறை திறன்களை வளர்ப்பது மற்றும் பிற நாடுகளின் கடற்படைகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் கடற்படை ஒத்துழைப்பை கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்த மான "பிளாள்ஸ் போலாங்" என்ற கப்பலே இவ்வாறு வரவுள்ளது. இந்தக் கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பொதுவான எதிர்காலத்துடன் கடல் நடவடிக்கைகளை தொடங்குவது இந்த பயணத்தின் நோக்கமாகும் என்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர் கேணல் ஜாங் சியாவோங் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் தனது பயணத்தில் வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கும். அத்துடன், ஹொங்கொங்கில் தொழில் நுட்ப வசதிகளை பெறும் என்றும் குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் யு. எஸ்.எஓகேன் என்ற கப்பல் கடந்த வாரம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது வருகை தரவுள்ள சீன கடற்படை கப்பல் தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் அவதானம் செலுத்தியுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
