
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 16 அடி உயரம் கொண்ட இந்தியா தமிழ்நாடு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிலையை ஒத்த சிலை புஸ்ஸல்லாவயில் பிரதிஷ்டை செய்வதற்கான பூமி பூஜை எதிர்வரும் 08 ஆம் திகதி இடம் பெறவுள்ளது.
முதல் கட்டமாக அன்றைய தினம் புதிதாக அமைக்கப்பட்ட வழி பிள்ளையருக்கான கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. 06 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு பூசைகளும் விநாயகர் பிரதிஷ்டையும் நடைபெறும்.
07 ஆம் திகதி பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று எண்ணெய் காப்பும் இடம்பெறவுள்ளது. பதினாறு அடி கொண்ட கற்பக விநாயகர் சிலை இந்தியா தமிழ்நாடு பிள்ளையார்பட்டி ஆலய வளாகத்தில் செதுக்கப்பட்டு வருகின்றது
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் புஸ்ஸல்லாவ நகரத்தை குறிக்கும் ஆரம்பப் பகுதியிலேயே இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
