நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் இடம்பெற்ற படகுவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 year ago

நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் இடம்பெற்ற படகுவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
70 விவசாயிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த மரப்படகு கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
விவசாயிகள் கும்பி நகரத்தில் உள்ள தங்கள் விவசாய நிலங்களை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
உளளுர் அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் மூன்று மணிநேர தேடுதலின் பின்னர் ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவம் இந்தப் பகுதியில் இடம்பெற்றமை இது இரண்டாவது தடவை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 900 விவசாயிகள் தங்கள் நிலங்களிற்கு கடல்மார்க்கமாக செல்கின்றனர் ஆனால் இரண்டு படகுகள் மாத்திரம் உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




