வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட காற்றுச் சுழற்சி நாளை(11) யாழ்ப்பாணத்தை அண்மிக்கும்.-- வானியல் அவதானிப்பாளர்கள் கணிப்பு
7 months ago

வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி நாளை(11) யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் என்று வானியல் அவதானிப்பாளர்கள் கணித்துள்ளனர்.
நேற்று மாலை திருகோணமலைக்கு தென்கிழக்காக 600 கிலோமீற்றர் தொலைவில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்தபடி நலிந்த காற்றுச்சுழற்சியாகவே அது நீடித்து வந்தது.
இந்தக் காற்றுச் சுழற்சி அதே திசையில் பயணித்தால் நாளை யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்றுச் சுழற்சி வடக்கை அண்மிக்கும் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
