ரணில் இந்த ஆண்டு இறுதிக்குள் எம்.பியாகப் பதவியேற்கவுள்ளார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இராஜிநாமா செய்வார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்கத் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்துக்கு வருமாறு முன்மொழிந்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் காலிப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, மக்கள் அவரை நாடாளுமன்றத்துக்கு வந்து பொதுச் சேவையில் சேருமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், ரணில், "கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்று கூறியிருந்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
