ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார்.
9 months ago

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார்.
அந்த விசேட வர்த்தமானியில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்பின் 70ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைவாகவும் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட் டத்தின் 10ஆம் பிரிவின் ஏற்பாடுகளை பின்பற்றி யும் 2024 செப்ரெம்பர் 25ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைத்து, 2024 நவம்பர் 21ஆம் திகதி பாராளு மன்றத்தை கூட்டவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அத்து டன், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் திகதியாக நிர்ணயிக்குமாறும் ஒக்ரோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
