பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உட்பட மூவருக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை.
10 months ago

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவருக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சம்பவ இடத்துக்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் துண்டுப் பிரசுரங்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சற்குணதேவி ஜெகதீஸ்வரன், செல்வராசா உதயசிவம் ஆகிய மூவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்பிரகாரம் எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றம் வருமாறு குறித்த மூவருக்கம் அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
