முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்கிறார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, 'நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு' எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பில் உள்ள பஸ் தரிப்பிடம் நிகழ்வுக்கான முக்கிய இடமாகத் தெரிவு செய்யப்பட்டு நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு காணப் படுவதோடு குறித்த பகுதியை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் துப்பரவு செய்யும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்ட நிகழ்வை விளம்பரப்படுத்தும் முகமாக பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் தேர்தல் விதிமுறையினை மீறி காணப்படுவதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இடத்திலிருந்து பதாதைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
