கனடாவில் விசேட தேவையுடையோர் அதிக அளவில் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர்.
1 year ago

கனடாவில் விசேட தேவையுடையோர் அதிக அளவில் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனையை எதிர்நோக்குவதாக கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் விசேட தேவையுடையோர் ஏனையவர்களை விடவும் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனைகளினால் இரண்டு மடங்கு பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் விசேட தேவையுடையோர் மத்தியில் 26 .4 வீத உணவு பாதுகாப்பின்மை காணப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், சாதாரண பொதுமக்கள் மத்தியில் இந்த வீதம் 12.5 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உணவிற்கான தட்டுப்பாடு, தரமான உணவு, உணவின் அளவு, உணவு வேலைகளை தவிர்த்தல் போன்ற பல்வேறு வழிகளில் உணவு பாதுகாப்பின்மை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
