
கதிர்காமத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பொது பஸ் நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு அருகில் மேற்படி இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து வந்தவர் என்றும், அவர் பல நாட்களாகக் கதிர்காமம் நகரத்தில் சுற்றித் திரிந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காகக் கதிர்காமம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
