மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களோடு, மக்கள் போராட்ட முன்னணியின், தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது.
10 months ago

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களோடு, மக்கள் போராட்ட முன்னணியின், தேர்தல் பரப்புரைக் கூட்டம் மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் போராட்ட முன்னணி சார்பில், நுவான் போபகே போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, போராட்ட முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தர்மலிங்கம் கிருபாகரனின் ஒருங்கிணைப்பில் கூட்டம் இடம்பெற்றது.
போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே பிரதான உறுப்பினராகக் கலந்து கொண்டதோடு, முன்னணியின் திருகோணமலை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
