இலங்கையில் திருடர்களை கைது செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் அதனை செய்ய வேண்டும்.-- சரத் வீரசேகர வேண்டுகோள்

இலங்கையில் திருடர்களை கைது செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் அதனை செய்ய வேண்டும் என பொது ஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் திருடர்களை கைதுசெய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி அளித்திருந்தார்.
எனினும் அதனை அவர் இன்னும் செய்யவில்லை. மக்கள் அதனைத் தான் எதிர்பார்க்கிறார்கள்.
பாராளுமன்றத்துக்கு நாட்டை நேசிக்கும் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
அரசியலமைப்பையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கக் கூடியவர்கள் அவசியம்.
அதனாலேயே நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
நாட்டை நேசிக்கக் கூடிய சிறந்த குழு எமது கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறது-என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
