இலங்கையில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 7 ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது
பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு செல்லும்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் உயர் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிரதிவாதிகள் தமது சட்டத்தரணி ஊடாக இது தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றில் அறிவித்த நிலையில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
