இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐ.என்.எஸ் மும்பை" எனும் போர்க்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐ.என்.எஸ் மும்பை" எனும் போர்க்கப்பல் 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இப் போர்க்கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் காலப் பகுதியில் இந்திய இலங்கை கடற்படையினருக்கு இடையிலான அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், இலங்கை கடற்படையினர் அக்கப்பலுக்கு சிநேகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அதனைப் பார்வையிடுவர்.
அதேபோன்று இக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் அக்கப்பலின் கட்டளை அதிகாரி இலங்கையின் மேற்கு கடற்பரப்புக்கான தளபதி ரியர் அட்மிரல் டபிள்யு.டி.சி.யு. குமாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்.
அதுமாத்திரமன்றி இக்கப்பல் விஜயத்தின்போது இலங்கை கடற்படையினருடன் இணைந்து விளையாட்டு நிகழ்வுகள், யோகாசனம், கடற்பரப்பு தூய்மையாக்கல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
