கனடாவில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
7 months ago

கனடாவில் வாகன திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ்குமார், 22 வயதான அஜ்பிரீத் சிங், 23 வயதான கலிடானைச் சேர்ந்த 25 வயதான அம்ரித்பால் சிங், 23 வயதான சுமித் சுமித் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இந்தக் கும்பல் பொலிஸாரிடம் சிக்கியள்ளது.
கலிடோ பகுதியில் இருந்து திருடப்பட்ட வாகனம் ஒன்று ஒன்ராறியோவுக்குள் பிரவேசித்த வேளையில் அது திருடப்பட்ட வாகனம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
