யாழ்.குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறிகட்டுவான் பகுதியில், மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்தார்.
இதன் போது வீதியால் சென்ற நபரை மறித்து அவருடன் முரண்பட்டு, அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமகன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ஊர்காவற்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
