அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றும் முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அந்தப் பதவியில் தொடர்ந்து அமர்த்த அரசு தீர்மானம்
1 year ago

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிவரும் முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அந்தப் பதவியில் தொடர்ந்து அமர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அரசியல் நோக்கங்களுக்கான கடந்த காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த 16 தூதுவர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் முக்கிய அரசியல் செயல்பாட்டாளராக கடந்த இரண்டு தசாப்தங்களாக செயல்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





