யாழ்.வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் மணல் கடத்திய டிப்பர் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கைப்பற்றினர்.
7 months ago

யாழ் வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.
எனினும், கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று புதன்கிழமை யாழ் வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை பொலிஸார் வல்லிபுரம் - ஆனைவிழுந்தான் வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிஸார் கோரியபோது அது தப்பியோட முற்பட்டது.
இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அதைக் கைப்பற்றினர்.
கடத்தக்காரர்கள் தப்பித்த நிலையில், டிப்பர் வாகனம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
