யாழ்.நீர்வேலியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (23) அச்செழு- நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்றையதினம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலை சங்கத்திற்கு வாழைக்குலையை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.
இந்த நிலையில், அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இருதய வால்வு சுருக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
