இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாகிஸ்தான் சீற்றமடைந்துள்ளது.

2 years ago


இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது பிரஜை களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாகிஸ் தான் சீற்றமடைந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் 38 நாடுகளின் பிரஜைகள் விஸா இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

எனினும் இந்த பட்டியலில் தனது நாடு இடம்பெறாதமை குறித்து பாகிஸ்தான் சீற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவர் ரவீந்திர விஜயகு ணவர்த்தன, இதனை வெளிவிவ கார அமைச்சர் அலி சப்ரியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார் எனவும் பாகிஸ்தானையும் இந்த பட்டியலில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண் டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பிரஜைகளுக்கான விஸா வழங்கும் நடைமுறை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் உல் அஜீஸ், இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதனை மாற்றாந்தாய் மனப்பான்மை என வர்ணித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கைக்கு சுமூகமான விதத்தில் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக தற்போதைய நடைமுறையை உடனடியாக மாற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளர்.



அண்மைய பதிவுகள்