பணக்கார நாடுகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை குறைப்பதால், பஞ்சம் மோசமடைவதாக ஐ.நா தெரிவிப்பு
1 year ago

உலகின் பணக்கார நாடுகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை குறைத்து வருவதன் காரணமாக, பஞ்சம் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் உலகில் 307 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் என்றும், அவர்களில் 60 சதவீதத்தினர் மட்டுமே உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025ஆம் ஆண்டில் உலகில் 117 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்காது என ஐ.நா எச்சரித்துள்ளது.
இந்த வருடமும் ஐக்கிய நாடுகள் சபை, தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க 49.6 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை என்று மதிப்பிட்டிருந்தது,
ஆனால் அதில் 46 சதவீதத்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்ததாக தெரியவருகிறது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




