



கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் ஒருவகை மீனினம் கடலிலிருந்து கரை ஒதுங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மீன்கள் நேற்று (30) மாலை வேளையிலிருந்து கரை ஒதுங்குகின்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையும், மாங்காடு, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுகுவதை அந்த பகுதி கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.
சிறிய அளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி கடற்கரையில் இறந்து கிடக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, காலத்திற்குக் காலம் இந்த மீனினம் கரை ஒதுங்குவதாகவும் இதனை உண்பதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் மட்டக்களப்பு காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
