மட்டக்களப்பு கல்முனையில் மாணவர்களுக்கு போதைப் பொருட்களை வியாபாரம் செய்தவர் இரண்டாவது தடவையாக கைது

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாடசாலையை இலக்கு வைத்து ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த நபரை இம் மாதத்தில் இரண்டாவது தடவையாக கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
நேற்று அதிகாலை கல்முனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமாக நடமாடிய குறித்த நபர் ஒரு கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த சந்தேக நபர் ஏற்கனவே கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொருவருடன் கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் வைத்து கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதான நபர் கல்முனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் கடந்த 11 ஆம் திகதி ஐஸ் போதையுடன் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தவர் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் கைதான நபரை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த விசேட அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்தக் கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ். ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
