
அனுமதிப் பத்திரத்துக்கு முரணாகவும் அனுமதிப் பத்திரம் இல்லாமலும் மணல் ஏற்றிய வாகனங்களின் 14 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியின் பனங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன் பகுதிகளில் நேற்று காலை வரையான 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று, ஏனைய பகுதிகளில் ஏ-9 வீதியில் நடத்தப்பட்ட சோதனையில் அனுமதிப் பத்திரத்துக்கு முரணாக மணல் ஏற்றிச் சென்ற 11 டிப்பர் சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.
கைதான அனைவரும் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பிடிபட்ட வாகனங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மணலுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
